ஜனாதிபதியுடனான சந்திப்பினை புறக்கணிக்க ஜே.வி.பி தீர்மானம்!

ஜனாதிபதியுடனான சந்திப்பினை புறக்கணிக்க ஜே.வி.பி தீர்மானம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பினை புறக்கணிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில்,

கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகரும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த கூட்டத்தினை புறக்கணிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகள் திருப்தியளிக்காத நிலையிலேயே குறித்த கூட்டத்தினை புறக்கணிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net