ஓய்வு குறித்து முதல்முறையாக மனம் திறந்த டு பிளெஸ்சிஸ்!

ஓய்வு குறித்து முதல்முறையாக மனம் திறந்த டு பிளெஸ்சிஸ்!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள ரி-20 உலக்கிண்ண தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்

“ரி-20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியாவுக்கு மீண்டும் வருவோம்.

அதுவே என்னுடைய கடைசி சர்வதேச சுற்றுப்பயணமாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே ரி-20 உலகக் கிண்ண தொடரை மிகவும் எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான டு பிளெஸ்சிஸ், இதுவரை 54 டெஸ்ட் போட்டிகள், 124 ஒருநாள் போட்டிகள், 41 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 8131 Mukadu · All rights reserved · designed by Speed IT net