அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்!

தற்போதைய சட்டவிரோத அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைகள் மூலம் ஆட்சியை பிடித்துக் கொண்டுள்ள சட்டவிரோத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போலி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பிலும் டுவிட்டர் பதிவிலும், ஹக்கீம் இந்த விடயங்களை இன்று தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net