நாளை கூடும் நாடாளுமன்றம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

நாளை கூடும் நாடாளுமன்றம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

பிரதி சபாநாயகர் தலைமையில் கடந்த 19ஆம் திகதி சில நிமிடங்களே நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்ற நிலையில் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் நாளைய அமர்வின் போது பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பார்வை கூடத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற அமர்வின் போது பொதுமக்களுக்கான பார்வை கூடம் மூடப்பட்டிருந்தது.

அத்துடன், மிளகாய்த்தூள் தாக்குதல் சம்பவத்தின் போது நாடாளுமன்றத்தில் பார்வையாளர் தரப்பிலிருந்து வீசப்பட்ட போத்தலையே நான் எறிந்தேன்.

அதற்குள் மிளகாய்த்தூள் இருந்தது எனக்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3664 Mukadu · All rights reserved · designed by Speed IT net