நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க எவராலும் முடியாது!

நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க எவராலும் முடியாது!

நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க எந்த ஒரு தரப்பினராலும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எவருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்பதால், நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ இல்லை எனவும் தெரிவித்தார்.

Copyright © 7040 Mukadu · All rights reserved · designed by Speed IT net