மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும்!

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும்!

அமைச்சரவையின் கடமைகளை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவுக்கு பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமர் அல்ல என்பதால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை திரும்பபெற வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி என்பதால், அவரது பாதுகாப்பை முற்றாக திரும்ப பெற கோரவில்லை. பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என கோருகிறேன்.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு பின்னர், புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதும் பொலிஸ் மா அதிபர், ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களின் பாதுகாப்ரப நீக்கியது போல், உடனடியாக செயற்பட்டு, மகிந்த உட்பட பொய்யான அமைச்சர்களின் பாதுகாப்பை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net