மீண்டும் மந்திர கோலுடன் மஹிந்த!

மீண்டும் மந்திர கோலுடன் மஹிந்த!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தனது மந்திர கோலை கையில் எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவரது கையில் எப்போதும் மந்திர கோல் ஒன்று இருக்கும்

அந்தக் காலப்பகுதியில் மந்திர கோல் மிகவும் பிரபலமான ஒன்றாக பேசப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் தனது மந்திர கோலை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இது பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கேளராவிலுள்ள மந்திரவாதிகளால் இந்த மந்திர கோல் விசேடமாக தயாரிக்கப்பட்டு மஹிந்தவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு காரியத்தையும் வெற்றி பெறச் செய்வதே இதன் நோக்கம் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமராக மஹிந்த தொடர்ந்து செயற்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளன.

இந்நிலையில் மஹிந்த மந்திர கோலுடன் வலம் வர ஆரம்பித்துள்ளார் என கொழும்பிலுள்ள அரசியல்வாதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை அலரி மாளிகைக்குள் இந்திய மந்திரவாதிகள் பூஜை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net