மஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்!

மஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்ற கலைப்புக்கு சாதகமாக வந்தால், அடுத்த பொதுத்தேர்தல் வரை மஹிந்த பிரதமராக கொண்ட புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க மைத்திரி திட்டமிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வர்த்தகமானிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும் பல்வேறு மட்டங்களிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடனும் மைத்திரி ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.

அதேவேளை மஹிந்த ராஜபக்சவும் கடந்த சில நாட்களாக, எதிர்த்தரப்பைச் சேர்ந்த பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் ஏதாவது ஒரு அரசாங்கத்தை அமைத்து, தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்க்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி மைத்திரி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9016 Mukadu · All rights reserved · designed by Speed IT net