அரசியலை விட்டு வெளியேற தயார் என்கிறார் மஹிந்த!

அரசியலை விட்டு வெளியேற தயார் என்கிறார் மஹிந்த!

மக்கள் ஆதரவு இருக்கும் வரை மக்களுக்கான எனது அரசியல் பயணம் தொடரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின், மகா நாயக்கர் இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு சபாநாயகரும், ஐக்கிய தேசியக்கட்சியுமே பொறுப்புக்கூறவேண்டும்.

மக்கள் நிலைப்பாட்டை அறிவதற்காகவே நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தலுக்கு செல்லும் முடிவை ஜனாதிபதி எடுத்தார்.

பொதுத்தேர்தல் ஊடாகவே அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணமுடியும் என நம்புகின்றேன். அதை நடத்துவதற்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும். மக்கள் ஆணையே மகத்தானது.

மக்கள் எம்மை நிராகரித்தால், விடைபெறுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். மாறாக மிரட்டல்கள், அடக்குமுறைகள்மூலம் எம்மை வெளியேற்றிவிடமுடியாது.

அரசியலில் பதவிகள் இருக்கும், இல்லாமல் போகும். பதவிக்காக அரசியல் செய்யவில்லை என்பதை ஐக்கிய தேசியக்கட்சிக் காரர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை, அரசியல் குழப்பநிலைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூறவேண்டும். நாடாளுமன்ற சம்பிரதாயத்தை அவர் அப்பட்டமாக மீறியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net