//anjeng சற்றுமுன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! | Mukadu

சற்றுமுன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு!

சற்றுமுன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்ஞானந்த சந்தியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரு பெண் உட்பட ஐந்து நபர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த ஐவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதுவரையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net