புதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகியதாக மஹிந்த!

புதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகியதாக மஹிந்த!

புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து தனது பதவியிலிருந்து விலகியதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் மஹிந்த இந்த அறிவிப்பை விடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையிலான விசேட சந்திப்பு கொழும்பு விஜேராம மாவத்தையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net