போராட்டத்தைக் கைவிட மாட்டேன்!

போராட்டத்தைக் கைவிட மாட்டேன்!

பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டுக்காக ஆரம்பித்துள்ளப் போராட்டத்தை கைவிடமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பதவியிலிருந்து விலகுவது தனக்கு கடினமான வேலையில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பகல் தங்காலையில் உள்ள மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் பிரதமர் பதவியை குறுகிய காலத்திற்கே வகித்திருந்தாலும் குறித்த குறுகிய காலத்துக்குள் பல நிவாரணங்களை வழங்கியதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

Copyright © 0653 Mukadu · All rights reserved · designed by Speed IT net