துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

கம்பஹா, மாதம்மன பகுதியில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டாக்கள் 4 மற்றும் மெகசின் ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த தொழிலில் ஈடுபட்டு வரும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 43 வயதிற்குட்பட்ட மினுவாங்கொட மற்றும் பிங்கிரய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 2135 Mukadu · All rights reserved · designed by Speed IT net