சற்று முன்னர் பிரதமர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உடனடியாக குறைக்கப்படுவதாக பிரதமர் சபையில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதே குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

அத்துடன் ஊடகங்கள் மீது பிரதமர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். தற்போது கறுப்பு ஊடகங்கள் தான் நாட்டில் செயற்படுகின்றன.
ஜனாதிபதிக்கு நான் அனுப்பாத பெயர்களை கூட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது எவ்வாறு என்று தெரியவில்லை.
ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் ஊடகங்கள் மாறிப்போயுள்ளன. கறுப்பு ஊடகங்கள் குறித்து சபையில் விவாதம் நடத்த வேண்டும்.
ஊடகங்களை நாம் இல்லாமல் செய்ய முயலவில்லை. ஆனால் கறுப்பு ஊடகங்களை வெளிப்படுத்த வேண்டும்.
நாங்கள் தான் ஊடக சுதந்திரத்திற்காக போராடினோம் எனினும் கறுப்பு ஊடகங்களை வெளிப்படுத்துவதற்கு ஜனவரி மாதம் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.