சுமத்ரா தீவில் சுனாமி; பலர் பலி!

சுமத்ரா தீவில் சுனாமி; பலர் பலி!

இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் ஏற்பட்ட சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனர்த்தத்தினால் மேலும் 745 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வனர்த்ததினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Copyright © 0168 Mukadu · All rights reserved · designed by Speed IT net