பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சஸ்கடூன் நபர் உயிரிழப்பு!

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சஸ்கடூன் நபர் உயிரிழப்பு!

பொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கிச்சூட்டில் சஸ்கடூன் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் மாறி மாறி நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டில் நபர் உயிரிழந்துள்ளார்.

ஆயுதமேந்திய நபரொருவர் வீதியை மறித்து தமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக குறித்த பொலிஸ் அதிகாரி, வோர்மன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 27 வயதுடைய நபர், பொலிஸ் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 6660 Mukadu · All rights reserved · designed by Speed IT net