கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை அமைப்போம்!

கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை அமைப்போம்!

கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தை வீழ்த்தி விட்டு புதிய அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்றின் மூலமோ அல்லது வேறு வழி முறைகள் மூலமோ அதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரல்லையில் அமைந்துள்ள திலங்க சுமதிபாலவின் வீட்டில் (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தால், அதற்கு ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டை நேசிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

எனவே குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடாத்தாது இழுத்தடிப்புச் செய்தால், ஏதாவது ஒரு வழிமுறையில் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 7991 Mukadu · All rights reserved · designed by Speed IT net