நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானிக்கவில்லை..

தற்போதைய நாடாளுமன்றில் ஆயுட்காலம் முடிந்த பின்னரே பொது தேர்தல் நடத்தப்படும். எனினும், முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் முயற்சிக்கின்றனர்.

எவ்வாறாயினும், முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை. இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Copyright © 5343 Mukadu · All rights reserved · designed by Speed IT net