19 ஆவது அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படாது!

19 ஆவது அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படாது!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த சுற்றாடல் துறை பிரதியமைச்சர் அஜித் மன்னபெரும, எக் காரணம் கொண்டும் 19 ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் மாற்றங்கள் கொண்ட வரப்படாது.

எனவே சகல கட்சித் தலைவர்களின் ஆதரவுடனும் 20 ஆம் சீர்த்திருத்தம் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் கடந்த 50 நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடிக்கும் இந்த திருத்தச்சட்டமே தீர்வினை பெற்றுகொடுத்திருந்தது.

19 ஆவது அரசியலமைப்பை அனைவரும் அங்கீகரித்துள்ளதாலேயே நீதிமன்றமும் ஜனநாயகத்துக்கு சாதகமான தீரப்பினை வழங்கியிருந்தது.

ஆகவே எக் காரணத்தை கொண்டும் இந்த திருத்தச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரவோ அல்லது இல்லாது ஒழிக்கவோ நடவடிக்கை எடுப்பட மாட்டது. அவ்வாறான நடவடிக்கைகள் இடமளிக்க போவதுமில்லை என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net