குஜராத்தில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி!

குஜராத்தில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி!

குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் என்ற பகுதியிலேயே குறித்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

பச்சாவ் நெடுஞ்சாலையில் கார் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியொன்று திடீரென சாலையின் தடுப்பை உடைத்துக்கொண்டு காரின் முன்பக்கமாக அதிவேகமாக மோதியது.

இதனால் குறித்த காரின் பின்னால் வந்த மற்றொரு பாரவூர்தியும் கார் மீது மோதியதால், இரண்டு பாரவூர்திகளுக்குமிடையில் சிக்கிய கார் பயங்கர விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரவூர்தியின் டயர் திடீரென வெடித்ததே குறித்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net