மஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க!

மஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க!

மாத்தறை- பெலியத்தை ரயில சேவையை ஆரம்பிக்க வந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு நேற்று ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

குறித்த ரயில் சேவையை மஹிந்த ராஜபக்சவே ஆரம்பித்து வைத்ததாக அவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.

இதனையடுத்து கோபமடைந்த அர்ஜூன ரணதுங்க, குறித்த ரயிலின் ஹோர்னை மாத்திரம் அழுத்திவிட்டு ரயிலில் பயணம் செய்யாமலேயே அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிகழ்வுக்காக கொழும்பில் அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களும் ரயிலில் பயணம் செய்யவில்லை.

Copyright © 2978 Mukadu · All rights reserved · designed by Speed IT net