தமிழக மீனவர்கள் 11 பேர் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு அவர்களின் இரு படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காரைநகர் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்கபட்டுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை யாழ்.நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.