//anjeng இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் நடைமுறை! | Mukadu

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் நடைமுறை!

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் நடைமுறை! மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை!

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை குறித்து எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் பிரதேச சபை சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பில் ஆலோசனை கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் மே மாதம் முதலாம் திகதியின் பின்னர் வடை ஒன்றையேனும் கையில் பிடித்து விற்பனை செய்ய முடியாதென குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு வழங்கினால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net