தமிழரின் அடையாளமாக திகழும் சட்டத்தரணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

தமிழரின் அடையாளமாக திகழும் சட்டத்தரணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட சட்டத்தரணிகள் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் காலை சத்திய பிரமாணம் செய்துள்ளனர்.

இந்த சத்தியபிரமாண வைபவத்தில் மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரப்படுத்திக் கொள்வதை விரும்பாது, தமிழ் மக்கள் பிரச்சினைகளில் சிக்கும் போது தனது வாதத்திறமையால் வெற்றிப் பெற்றுக் கொடுத்த சட்டத்தரணி கே.வி.தவராசாவிற்கு ஜனாதிபதியால் மிகச் சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

1903ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிகாலத்தில் முதன் முதலாக மூன்று சிரேஸ்ட சட்டத்தரணிகளான, மூவருக்கு( பொன்னம்பலம் இராமநாதன், தோமஸ் டி சம்பயோ, பரட்ரிக் டோநொஜ்ட்) ராஜசட்டத்தரணியாக பதவி வழங்கப்பட்டது தொடக்கம் இராணி சட்டத்தரணியாக Queen Councel சத்தியபிரமாணம் எடுத்த சட்டத்தரணிகள் முதல் 1972ஆம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முதல் வழக்காக குட்டிமணி தங்கத்துரை ஜெகன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து கடந்த கார்த்திகை மாதம் மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கு வரை பல நூற்றக்கணக்கான வழக்குகளில் அரசியல் கைதிகளுக்காக ஆஜராகியவர்.

குற்றவியல் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபரினால் கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, பாணந்துரை மற்றும் நீர்கொழும்பு ஆகிய மேல் நீதிமன்றங்களில் 38 வருடங்களாக வாதாடி, பல அரசியல் கைதிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச்சட்டம், மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பபட்ட இளைஞர்கள், யுவதிகள் மட்டுமின்றி வைத்தியர்கள் பொறியியளாளர் உள்ளக சர்வதேச ஊடகவியளாளர்கள் கோவில் தர்மகர்த்தாக்கள் கிறிஸ்தவமதப் போதகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகள், சுங்க திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள், கிராம சேவையாளர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், புலம்பெயர் தமிழர்கள், வங்கி முகாமையாளர் என சமூகத்தின் பல தரப்பட்டவர்களுக்காகவும் ஆஜராகிய வழக்குகளான

(1) கலதாரி குண்டுத் தாக்கதல் வழக்கு

(2) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பிரிவு 157

(3) விடுதலைப் புலிகளின் கடற்புலி பகிரதி கைதும் விடுதியும் (பிரான்ஸ்)

(4) ஊடகவியளாளர், பரமேஸ்வரி, சுசந்திகா

(5) வத்தளை எலகந்த மின்மாற்று நிலைய தாக்குதல்

(6) டென்மார்க் சித்ரா நாடு கடத்தல் வழக்கு

(7) மேஜர் முத்தலிப் கொலை முயற்சி வழக்கு

(8) பாரமி குலதுங்க கொலை வழக்கு

(9) ஊடகவியளாளர் யசிதரனும் வளர்மதி கைதும் விடுதலையும்

(10) விடுதலைப் புலிகளுடன் நிதித்தொடர்பு கொண்டதாக கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சுவிஸ் பிரஜை விடுதலை

(11) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு

(12) முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கொலைமுயற்சி வழக்கு

(13) முன்னால் வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு

(14) குறிபிட்டு கூறக் கூடிய இந்த வழக்குகளில் அரசியல் கைதிகள் விடுதலையும் என்பவைகள் அடங்கும்.

தமிழ் பேசும் சமூகம் சார்ந்த சட்டதரணிகளில் இவருடன் சேர்த்து இன்னும் இருவர் சத்தியபிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net