பழைய முறையில் தேர்தல் நடத்துவதை கட்சி எதிர்க்காது!
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதை தமது கட்சி எதிர்க்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எந்த முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை மக்களின் தேவையாக இருக்கின்றது.
இதனால், பொய்யான காரணங்களை கூறி, மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.