மின்சார சபையின் தலைவராக ரஹித ஜயவர்த்தன நியமனம்!
இலங்கை மின்சார சபையின் தலைவராக ரஹித ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (புதன்கிழமை) வழங்கியுள்ளார்.
இவர் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.