கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

கொட்டாவை – பொரளை வீதி தெபானம உயன சந்தியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஹகரகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 2680 Mukadu · All rights reserved · designed by Speed IT net