முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு?

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு?

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக அட்மிரல் கரன்னகொடவிடம், வாக்குமூலம் ஒன்றைப் பெற்று கொள்வதற்காக பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றிந்தனர்.

எனினும் குறித்த பொல்ஹென்கொட முகவரியில் அவரது சகோதரர் வசித்து வரும் நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வேறொரு முகவரியினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வழங்கிய பத்தேகனவில் உள்ள கரன்னகொடவின் வீட்டுக்கு கிருலப்பனைப் பொலிஸார் சென்றபோதும் அவர் அந்த முகவரியில், இல்லையென கிருலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net