நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் போகும்!

நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் போகும்!

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கட்சி பேதங்கள் இன்றி நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமே பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆணைமடுவை மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பேசிய அவர்,

அரசியல் அமைப்பில் 19வது திருத்தத்தை ரத்து செய்தால், நாட்டின் ஜனநாயக சுதந்திரம் இல்லாது போகும். 19வது திருத்தம் என்பது உரிமைகளுக்கான சட்டமாகும்.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கட்சி பேதங்கள் இன்றி நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். 19ஆம் திருத்தத்தின் பலன்கள் தற்போது வெளியாகின்றன.

அரசாங்கத்தை விமர்சித்தல், போராட்டங்கள், சுதந்திரமாக செயற்படல், தகவல்களை பெற்றுக் கொள்ளல் என்பன இந்த 19ம் திருத்தத்தின் கீழே சாத்தியப்பட்டது என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net