மைத்திரியை மகிந்தவிடம் பலிகொடுக்க மாட்டோம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு நெருக்கடிகள் உருவாக நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாம் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ நாம் உருவாக்கிய நல்லாட்சியையோ எந்த காரணத்திற்காகவும் ராஜபக்சவினருக்கு பலிகொடுக்க மாட்டோம்.
எமது நாட்டு மக்கள் எமக்குக் கொடுத்த ஆணையினை எம்மால் மீறமுடியாது. நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். ஜனாதிபதி இன்றும் எம்மோடுதான் உள்ளார். எதிர்காலத்தில் நல்ல காட்சிகள் அரங்கேறும்.
இந்நிலையில், நாம் மைத்திரிபால சிறிசேனவை ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம். அவருடன் அரசியல் உடன்படிக்கை ஒன்றும் செய்யவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.