முல்லைத்தீவில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு!
முல்லைத்தீவில் அண்மை நாட்களாக பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஒதியமலை வரையான கிராமங்களை சேர்ந்த பண்ணையாளர்களே இவ்வாறு கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் கொக்குளாய் கடல்நீர் ஏரி மற்றும் கோட்டைக்கேணி, எரிஞ்சகாடு, நாயாற்று வெளி மற்றும் ஆண்டான்குளம், குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஒதியமலை போன்ற பிரதேசங்களில் வயல் செய்கை காலங்களில் பட்டிகளில் அடைத்து வளர்க்கப்பட்ட மாடுகள் நெல் அறுவடையின் பின்னர் தற்பொழுது மேய்ச்சலுக்காக மேய்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டு மாடுகள், கிளாறி இனமாடுகள் என பண்ணையாளர்களினால் வளர்த்து வரப்பட்ட நூற்றுக்கணக்கிலான மாடுகள் ஒருவித நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கால்நடை வளர்ப்பினை தொழிலாக கொண்டு நாள்தோறும் பால் உற்பத்தியினை இலக்காக கொண்டு செயற்படும் அதிகளவான கால்நடை பண்ணையாளர்கள், மாடுகளின் உயிரிழப்பால் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.