களியாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட 17 பேருக்கு விளக்கமறியல்!

களியாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட 17 பேருக்கு விளக்கமறியல்!

கொக்கெய்ன் மற்றும் போதை பொருள் வில்லைகளுடன் கைதுசெய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 17 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் 3 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 17 பேரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பாக மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net