அட்மிரல் வசந்த கரன்னகொட கைது செய்வதை தடை செய்யுமாறு உத்தரவு!
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்வதை தடை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் தன்னை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக வசந்த கரன்னகொடவினால் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவரை கைது செய்யும் நடவடிக்கையை தடை செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக அட்மிரல் கரன்னகொடவிடம், வாக்குமூலம் ஒன்றைப் பெற்று கொள்வதற்காக பொலிஸார் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அவரது வீட்டிற்குச் சென்றிந்தனர்.
எனினும் குறித்த பொல்ஹென்கொட முகவரியில் அவரது சகோதரர் வசித்து வரும் நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வேறொரு முகவரியினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வழங்கிய பத்தேகனவில் உள்ள கரன்னகொடவின் வீட்டுக்கு கிருலப்பனைப் பொலிஸார் சென்றபோதும் அவர் அந்த முகவரியில், இல்லையென கிருலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் இவர் நாட்டை விட்டுத் தப்பிச்செல்லக் கூடும் என்பதால், கடவுச்சீட்டை முடக்கவும், அவரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.