இலஞ்சம் பெற்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி கைது!
இலஞ்சம் பெற்ற குற்றம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பகுதியில் வைத்து இவர் (வியாழக்கிழமை) இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரிடம் இருந்து குறித்த அதிகாரி 80,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.