கொழும்பில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சீன பிரஜைகள் மூவரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net