யானை மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி!

யானை மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின், 17 ஆம் கட்டை புத்தி தசுன்கம பகுதியில் நேற்று அதிகாலை பயணித்த வாகனம் யானை ஒன்றின்மீது மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயங்களுக்குள்ளானவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், மணல்குன்று பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய குடும்பஸ்தவர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த யானைக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் குறித்த யானை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9224 Mukadu · All rights reserved · designed by Speed IT net