பேருந்து தரிப்பிடத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!

பேருந்து தரிப்பிடத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!

திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், இன்று காலையில் தலை மற்றும் கால்களில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ். நான்காம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய அந்தனிபாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யாழிலிருந்து திருகோணமலைக்கு பேருந்தில் வந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net