மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்!

மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்!

எதிர்வரும் நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக 07 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பட உள்ளதாக அமைச்சர் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0481 Mukadu · All rights reserved · designed by Speed IT net