பிரதமரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும்!

பிரதமரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும்!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வஜிராஷ்ரம விகாரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

‘‘மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு அமையவே இடம்பெற்றது.

இந்த மோடி பிரதமரை மையப்படுத்தியே இடம்பெற்றமை அனைவரும் அறிந்த விடயம்.

பிணைமுறி மோடியாளர்கள் ஆட்சியில் இருக்கும் வரையில் முறையான ஒரு தீர்வு ஒருபோதும் கிடைக்கப்பெறாது.

தலைமைறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரும் நடவடிக்கைகளை பிரதமர் ஒருபோதும் துரிதப்படுத்தமாட்டார்.

ஆட்சிமாற்றத்தின் பிறகே இந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்‘ என்று தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net