இந்தோனேஷியாவில் சுரங்க நிலச்சரிவு: 5 பேர் பலி!
இந்தோனேஷியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்தோனேஷியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், மத்திய பகுதியில் அமைந்துள்ள கலிமந்தன் மாகாணத்தில் (புதன்கிழமை) நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன்போது அம்மாகாணத்தில் அமைந்துள்ள சுரங்கத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள் சிக்கினர். இதன்போதே ஐவர் உயிரிழந்ததோடு இருவர் காயமடைந்தனர்.
குறித்த பகுதியில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என பேரிடர் மேலாண்மை குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.