மாட்டை குளிப்பாட்டச் சென்றவர் முதலை கடித்தத்தில் வைத்தியசாலையில்!
குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடித்தத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
யாழ்.மட்டுவில் கிழக்கை சேர்ந்த நாகநதி கிருஷ்ணமூர்த்தி (வயது 58) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் குளத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டு இருந்த வேளை குளத்தில் இருந்த முதலை அவரது தொடை பகுதியை கெளவி பிடித்துள்ளது.
உடனே விரைந்து செயற்பட்ட அவர் முதலையை கைகளால் இழுத்து பிடித்து முதலையை தூக்கி குளத்தில் வெளியே வீசியுள்ளார்.
அதன் பின்னர் தொலை பேசி ஊடாக உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து அங்கு விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.