நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் பலி!

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் பலி !

நாவலபிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கம்பளை பகுதியை சேர்ந்த 18 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 3.00 மணியளவில் தனது காதலியுடன் குறித்த மாணவர் அங்கு நீராட சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் இருவரும் நீராடும் போது குறித்த மாணவர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணால் போயுள்ளார்.

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு இருவரும் குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net