பாரிய சம்பவத்திற்கு மைத்திரியே காரணம் – மேர்வின் சில்வா
நாடு முழுவதில் இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு என மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் அவர் முப்படையினருக்கு வழங்காதமை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்பு அமைச்சருக்கான பொறுப்பினை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.