பொலனறுவையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி கைப்பற்றப்பட்டது
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனுடன், மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பதிவை கொண்ட PX 2399 என்ற இலக்கத் தகடு பொருத்தப்பட்ட லொறியே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.