தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய குறைந்தபட்சம் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தனியார் துறையில் நாளாந்த கொடுப்பனவு 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை அதிகரிப்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.