இரத்மலானை வான்பரப்பில் விமான பயிற்சிக்கு தடை

இரத்மலானை வான்பரப்பில் விமான பயிற்சிக்கு தடை

இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாகவே, இரத்மலான விமானப்படைத் தளத்திற்கு அருகில் விமானப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை மற்றும் அதனை அண்மித்த வான் பிரதேசங்களிலும் இந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விமானிகள் பயிற்சிப் பாடசாலைகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தல், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கட்டுக்குருந்த உள்ளுர் விமான நிலையத்தை அண்மித்த, 35 கிலோமீற்றர் பரப்பில் மாத்திரம் விமான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 1582 Mukadu · All rights reserved · designed by Speed IT net