பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் இரண்டாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது அனைத்து மாணவர்களும் தமது சுற்றுச்சூழல் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும் அதிகார சபை தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 9083 Mukadu · All rights reserved · designed by Speed IT net