அமைச்சை துறப்பது குறித்து தீர்மானமில்லை!

அமைச்சை துறப்பது குறித்து தீர்மானமில்லை!

தனது அமைச்சு பதவியினை துறப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அரசாங்கத்தில் இருந்து வெளியேறவோ அல்லது அமைச்சை துறக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.

எனினும் சில விசேடமான திட்டங்களை வகுத்து அதற்கமைய ஒரு இயக்கமாக உருவாகும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் பயங்கரவாதமற்ற தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. அதற்கான புதிய அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டியுள்ளது.

இது அரசியல் மாற்றத்தை உருவாக்க ஏற்படுத்தும் கூட்டணி அல்ல. பயங்கரவாதமற்ற நாட்டினை கட்டியெழுப்ப அணிதிரளும் அனைவருக்கும் தேசத்திற்கான வழி என்ற இந்த மக்கள் இயக்கத்தில் இணைந்துகொள்ள முடியும்,.

அதேபோல் இந்த செயற்பாடுகளை தடுக்கும் அனைவரையும் அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையும் முன்னெடுப்போம்“ என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net