ஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை!

ஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 6 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிறைச்சாலை சென்றிருந்த ஜனாதிபதியை, ஞானசார தேரர் சந்தித்து தனது விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஞானசார தேரோவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு அரசியல் தலவர்கள் மற்றும் சர்வமத தலைவர்கள் உட்பட பல அமைப்புக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net