மின்சாரம் தாக்கி மூவர் பலி!
தலககம அக்குரஸ்ஸ பகுதியில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலககம அக்குரஸ்ஸ பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பை பெற்ற வேளையிலேயே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளார்கள்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.